பண்டாரம்

அறிமுகம் : பண்டாரம் என்று அழைக்கப்படும் சமூக மக்கள் தமிழ்நாட்டையும், ஈழத்தையும் பூர்விகமாக கொண்ட தமிழ்க்குடிகளாகும். பண்டாரம் என்பது பட்டமே தவிர சாதி இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்களின் குடி பெயர் வைராவி ஆகும். வைராவி என்றால் மனஉறுதி கொண்டவர்கள் என்று பொருள். இவர்கள் பெரும்பாலும் கோவில் பூசை செய்பவர்களாகவும், பூ மாலை கட்டும் பணிகளை செய்பவர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் பெரும்பான்மையான அம்மன் கோவில் பூசாரிகள் இம்மக்களே. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் இவர்களே பூசாரிகள். மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் இன்றளவும் இவர்களே பூசை மேற்கொண்டு வருகிறார்கள். பண்டாரம் சொல் விளக்கம்: பண்டாரம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் ‘ பொன், வெள்ளி, முத்து போன்ற உயர் மதிப்புடைய பொருள்களைச் சேர்த்து வைக்கும் கருவூலம்’ என்பதாகும். கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை அரசு ...